பக்கம்:கனியமுது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


“ஆந்தையினைப் பழித்திட்ட கோட்டான் போல

அவனைப் போய் நீ எள்ளி நகைத்தா யன்றோ?

மாந்தரினம் தழைப்பதுதான் முறையென் றாலும்

வருங்காலக் குடிமக்கள் வதைய வேண்டா !

ஆய்ந்துணர்ந்து குடும்பத்தின் வருமா னத்தை

அழகான உடல்வளத்தை-எதிர்கா லத்தின்

வேந்தராகப் பிள்ளைகளை வளர்க்கும் வாய்ப்பை-

மேலாகக் கருதிடுவீர், என்போல்!” என்றேன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/75&oldid=1380238" இலிருந்து மீள்விக்கப்பட்டது