இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
கையிருப்புக் கரையுமட்டும் ஊரைச் சுற்றிக்
- கரைகாணாக் கலம்போலச் சுற்றி வந்தான் !
மையிருட்டுப் படர்ந்தபின்னே சாலை யோரம்
- மரத்தடியில் படுத்திருந்து, விடிந்து பார்த்தான் ..
வையகமே சுழல்வதுபோல் மயக்க முற்றான் :
- வைத்திருந்த பொருளொன்றுங் காண வில்லை !
ஐயிரண்டு நாள்வரையில் அலேந்து விட்டான் ;
- ஆதரிப்பார் யாருமில்லை ! ஆங்கி ருந்த
சிற்றுணவும் தேநீரும் விற்று வாழும்
- சிறுகடையின் வாயிலின்முன் நின்று கொண்டு,
“பற்றுவர(வு) எழுதுகிறேன்: ஐயா, என்னைப்
- பணியாளாய்க் கொள்வீரா?" என் று கேட்டான்.
சற்றேனும் எதிர்பார்க்க வில்லை; அங்கே
- சமையலறை அலுவலிலே குமரப் பன்தான் !
உற்றுற்றுப் பார்த்தவனும் உள்ளே ஒட,
- ஒழியாதவியப்போடு திரும்பி வந்தான் !
- ஒழியாதவியப்போடு திரும்பி வந்தான் !
70