இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
தடுமாற்றம், ஏமாற்றம், தயக்கம் தோல்வி,
- தாங்கவொனக் கொடியபசி, களைப்புச் சோர்வு
கெடுமார்க்கம் போகவில்லை எனக்கேன் துன்பம் ?
- கேடுகெட்ட ஆசையில்ை இழந்தேன் எல்லாம்!
சுடுகாடு செல்வதொன்றே மிச்சம் என்றன்
- சொக்கம்மாள் முகத்தினிலே விழியேன் !’ என்று
கடும்வாக்காற் சூளுரைத்தான்; மனமா கேட்கும்?
- கன்னியப்பன் புலம்பியதை மனேயாள்
கேட்டாள் :
'ஏனத்தான் ! நானிருக்க எதையி ழந்தீர்?
- எதற்காக மனக்கவலை? மிகுந்தி ருக்கும்
மானத்தை முதலாக வைப்போம், வாரீர் !
- மன்னவன்என் மாமருைம் விட்டுச் சென்ற
தானத்தை-ஒருகாணி நிலத்தை-வைத்துத்
- தளராமல் உழைத்திட்டால் வளமே பொங்கும்!
வீணத்தான் நகரத்தின் வெளிக்க வர்ச்சி :
- விரைவாக ஊர்செல்வோம்' என்றாள் சென்றார்.
- விரைவாக ஊர்செல்வோம்' என்றாள் சென்றார்.
71