இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
ஆண்டிறுதித் தேர்வெல்லாம் முடிந்த பின்னர்
ஐந்நூறு விடைத்தாள்கள் கொண்ட சிப்பம்
வேண்டியாற் காப்புடனே மதிப்பீட் டிற்கு
விடுத்திட்டார் கல்விநெறி யாளர் தாமே.
துாண்டிவிட்டாள் தேநீரும் தருவ தாகத்
துணைவியவள் கட்டளையால், தூக்க மின்றி
மூண்டெழுங்த சுறுசுறுப்பால், பத்தே நாளில்
முடித்திட்டார்; அனுப்புதற்கும் திட்டமிட்டார்
பகட்டாலும், நெல்வயலில் கரும்பு போட்டுப்
பட்டினியால் வாடிடுவோர் வயிற்றை ஏய்த்தும்
திகட்டாத பெருஞ்செல்வம் திரட்டி வைத்துத்
திளைக்கின்ற அளகப்பர் அருமைச் செல்வன்
புகட்டாமல் ஏழையர்க்குக் கிட்டுங் கல்வி
புரியாமல்-வகுப்புக்குப் பல்லாண் டாக
நகர்த்தாமல் உயர்த்திவந்தும், புகுமு கத்தில்
நலமாகச் சிக்கிவிழித் திருந்த காலை...
74