பக்கம்:கனியமுது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

நல்லதொரு பசுமரத்தைச் சாய்ப்ப தற்கும்
    நன்செய்யின் விளைச்சலினைக் குறைப்ப தற்கும்
புல்லுருவி-களைமுளத்தல் போலே, இந்தப்
    பொதுநலனை வளர்க்கின்ற செயலில் கூடப்
பொல்லாத மாக்களுமே புகுதல் உண்டாம்!
புனிதத்தை இதனலே கெடுக்க வேண்டாம்;
வல்லதொரு சட்டத்தின் உதவி கொண்டு
    வால்டு வோர்கொட்டம் அழிப்போம் ” என்றான்.


தரமுடைய சரக்குகளைத் தேர்ந்தெ டுத்துத்,
    தாங்குகின்ற மலிவுவில் போட்டு விற்றுச்
சிரமமின்றி அனைவர்க்கும் வழங்கி வந்தான்.
    திறமுடைய முறையிதனை ஊரார் மெச்சி,
உரமுடைய நெஞ்சத்தால் உற்ற நன்மை,
    ஒருமனிதன் கொழுக்கின்ற நிலைமை மாற்றி
மரமனைய மானிடர்க்கும் உரிமை ஈந்த
மகத்தான திட்டமென வாழ்த்தி நின்றார்!

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/89&oldid=1383219" இலிருந்து மீள்விக்கப்பட்டது