பக்கம்:கனியமுது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என்பள்ளித் தோழிதானே இராதா, எங்கள்
    இருவருக்கும் நெருக்கமாக இராதா நட்பு?
பண்புள்ள பெண்போலப் பாசாங் காகப்
    பழகிடுவாள், புரிந்துகொண்டும் மறைத்து வந்தேன்!
அன்புள்ள பெற்றோரும் அவளுக் கேற்ற
     அழகுமண மகனெருவன் தேர்ந்தெடுத்துப்
பெண்பார்க்க வருநாளில் எனைய ழைத்தார்.
பெருந்தன்மை யால்உடனே சென்று நின்றேன்.


எதிர்பாரா விந்தை அந்த இளைஞ ருக்கோ
    என்மேல்தான் பெருவிருப்பாம்; எழுதி விட்டார்!
புதிராகத் தோன்றிடினும், விளக்க மாகப்
    பொருள்பொதிந்த கடிதத்தில் வரைந்தி ருந்தார்!
“குதிர்போல வளர்ந்திருந்தும் குணத்தில் கோணல்,
    குறிப்பாக நான் உணர்ந்து கொண்டேன்!” என்றார்.
அதிர்ச்சிமிக அடைந்திருப்பாள் இராதா! அன்றே
    அவளுக்குச் சமாதானம் கூறச் சென்றேன்!

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/90&oldid=1383224" இலிருந்து மீள்விக்கப்பட்டது