இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
சீமான் போல் பகட்டான தோற்றங் காட்டிச்
செல்வந்தர் பெண்களிடம் நயமாய்ப் பேசிக்
காமாந்த காரத்தில் மூழ்கச் செய்து
கண்மறைக்கும் மோகவெறி ஊட்டிப் பின்னர் -
ஏமாந்த காலத்தில் தங்கம், வைரம்
இரவலெனப் பெற்றுப் பின் ஏப்ப மிட்டுச்
சாமான்ய பதிலுரைப்பான்; கேட்க அஞ்சிச்
சத்தமின்றிக் கோட்டைவிட்டோர் தொகை ஏராளம்!
மாளிகையோ மிகப்பெரிதாய், வெளியார் பார்வை
மறைகின்ற தனியிடத்தில்! இரவு தோறும்
கேளிக்கை குறைவில்லை! கீழோர் கூட்டம்
கேடுகெட்ட செயலுக்குக் குவியும் ஆங்கே !
ஆளுக்குத் தக்கவாறு குடியும், சூதும்
ஆரணங்குச் சேர்க்கையுடன் நிறைய உண்டாம்!
நாளுக்கு நாள் இவைகள் வலுத்த தாலே
82