இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
ஓவியமாய், உண்ணாத கனியாய்த் தோன்றி
ஓயாமல் நகைபுரியும் மழலை, கண்ணீர்க்
காவியமாய் மாறுதற்கோ வழிவ குத்தாள்?
கணவரிதைக் கேட்டவுடன் பிணம்போ லானார்!
“ஆவியெலாம் நீயென்றே கருதியுள்ளேன்;
அற்பமான ஐயத்தால் சொற்ப நாளில்,
பாவியெனும் பழிச்சொல்லை ஏற்றி டாதே!
பார், என்றன் தொழிலையும் நான் விடுப்பேள்!” என்றார்
“பைத்தியந்தான்! நீங்களில்லை; நானே அத்தான் !
பக்குவமில் லாமனத்தின் குறைதான் ! என் மேல்
வைத்திருக்கும் ஆழமான அன்பின் எல்லை—
வாழ்வுவேறு, தொழில் வேறாம் என்ற உண்மை
மைத்துனராம் என் அண்ணன் தங்கள் சார்பில்
வகையாக எடுத்துரைத்தார்; தெளிவு பெற்றேன் !
வைத்தியமே தேவையில்லை!” என்றாள் தங்கை!
86