பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுத்தார். வெளியே தள்ளப்பட்ட குடலை அதன் வயிற்றினுள் தள்ளினார் ; கிழிந்த வயிற்றுப் பகுதியை வைக்கோலால் தைத்தார். கந்தல் துணியொன்றால் காயம் பட்ட இடத்தைக் கட்டினார். அவ்வளவு தான். நாய் பிழைத்துக் கொண்டது.

இந்த நிகழ்ச்சியை, அருகே இருந்து பார்த்தவர்கள் பிறரிடம் சொல்லிச் சொல்லி அம்மா பொது மக்களின் பார்வைக்கு உரியவரானார்.

இன்றுபோலவே பத்து ஆண்டுகளுக்கு முன்பும் சந்நிதித் தெருவில் திரிந்த மாயம்மா எது கேட்டாலும் கொடுக்க உணவு விடுதிகள் கிடையா.

அம்மா கேட்டுக் கொடுத்தால் அன்று விற்பனை நல்ல நடக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது.

அம்மா நம் கடையில் வந்து எதாவது கேட்க மாட்டார்களா என்று ஏங்கும் கடைக்காரர்கள் கூட உண்டு.

இப்போது, எப்போதாவது சந்நிதிக் கடை வீதியில் அம்மா சென்று இட்டலியோ வடையோ வாங்கித் தன்னுடன் வரும் நாய்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது உண்டு. இது அன்றாட நிகழ்ச்சி அல்ல.

அம்மாவிடம் பணம் வாங்கித் தொழில் நடத்தினால் அது செழிக்கும் ; லட்சாதிபதியாகலாம் என்ற நம்பிக்கையில் பலர் அம்மாவிடம் கையேந்தி நிற்பார்கள்.

சிலர் அப்படிப் பணம் கிடைத்து தொழில் நடத்தி செல்வந்தானதாகச் செய்திகளும் உண்டு.

திருவனந்தபுரத்தில் ஒரு துணி வணிகர் தம் தொழிலில் கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் அம்மாவிடம் வந்தார். அம்மா ஐந்து ரூபாய் அவருக்குக் கொடுத்தார். அவர் அதை வாங்கி மறுபடியும் தொழில் ஆரம்பித்தார். பின்னர் அவர் லட்சாதிபதியான