பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 விளக்கமோ, மாயி தன்னை அவ்வாறே எதிரொலி செய் வது? மாயியிடம் குழந்தை தனியன் பு காட்டியது. அக் குழந்தையின் தாயோ பாதி ம | யி போல () பரபரப் பின் றி-குமரிக் கடலில் எட்டியிருந்து கதிரவன் தோற்றத் தையும் மறைவையும் காணும் எழில் கலைஞரைப் போல் சுவரில் சாய்ந்து கொண்டார்கள், ம்ாயி மதிமுகத்தைக் கண்டு மலர்ச்சி பெறும் குமுதம் போல் குளிர்த்திருத்தார் கள். அந்தப் பெண் குழந்தையோ வைத்த கண் வாங்கா மல் மாயியின் முகத்தை முகந்து கொண்டிருந்தது தன் அன்னையின் இசைவை விகுடியில் பெற்று அவர்கள் வைத்திருந்த லட் டு போன்ற மூன்று உருண்டைகளே எடுத்து மாயியிடம் ஆர்வத்தோடு நீட்டியது, 'ஊகூம் என்று ஒரு விளுடி இசையாமையை வெளிப் படுத்திய மாயி மறு வினுடியே கை நீட்டி குழந்தையிடம் அந்த மூன்று உருண்டைகளை மீண்டும் கேட்டார்கள். அந்தக் குழந் ை க்கு அளவில்லாத மகிழ்ச்சி, அதைக் கண்டு அனைவருக்குமே பெருமகிழ்ச்சி. மாயியோ எந்தி ரம் போல் அந்த முன்று உருண்டையினையும் வாங்கி தன் உடன் வந்த தொண்டர் இராசேந்திரனின் ஒரு சிவப்புத் துணியில் முடித்து வைத் திருந்த முடிச்சுக்குள் நுழைக்க முனைந்தார்கள்-முயன்ருர்கள். அதை அவர்கள் செய்யச் சிரமப் படுவதை பார்த்து நானே முன் வந்து அத்தப் பொதிக்குள் அந்தப் பொருள்களை பொதிந்தேன். நான் தான் நட்புக்கு நாரளவு இடம் நாடி அலைந்தேனே! மாயி எதையும்-எவரையும் கண்டு கொளமல் நவராத்திரி பொம்மை ேப ல் உட்கார்ந்திருந்தார்கள்! எனக்கோ நான் செய்த அந்தச் சிறு வேலையை அவர்கள் அனு மதித்ததே பெரிய புண் ணியமாகத் தோன்றியது. மாயி முதலில் மறுத்த மூன்று லட்டுகளை எதற்காக அப்புறம் கேட்டு வாங்கினுர்கள்-ஆம். யாருக்காக ? எதற்காக ? குடும்பக் கூட்டத்தில் இருந்த ஒ வ் .ெ வ | ரு வ ரு ம் 'போய் வறேன்' என்று சொல்லி, மாயியிடம் விடைபெற்று