பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கன்பூசியஸின்

லேயேதான் கவனமாக நிற்பான்; வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கு இரண்டாவது யோசனையே.

தெரிந்தது இது என்பதை அறிவதும்-தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான்; அறிவாளியின் சிறந்த இயல்பாகும் என்று சான்றுரைக்கின்றார்!

"அன்பு என்பது உதவி செய்வதுதான்; அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும். இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள்.

அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள். அழகிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.

அமைதி என்றால் என்ன என்பது பற்றி அவர் அறிவிக்கும் போது; "தன் வீட்டில் உள்ள குடும்பத்தினர்களுடன் அன்புடன் வாழ்பவன்தான் அமைதியைப் பற்றிப் பேசிட அருகதை உடையவனாவான். பல விஷயங்களைப் பற்றி, நன்றாக ஆராயும் போதுதான் அறிவு பிறக்கிறது. அந்த அறிவும் அதனால் முழுமை அடைகிறது. அந்த அறிவு நிறைவு பெறுவதால் சிந்தனையும், என்ணங்களும் தூய்மை பெறுகின்றன. எண்ணங்களும், சிந்தனைகளும் பரிசுத்தம் பெறுவதால் இதயம் தூய்மை அடைகின்றது. அந்த இதயத் தூய்மை, மனிதனின் மனதைப் பன்படுத்துகிறது. பக்குவம் அடைகிறது. இதுபோன்ற மனப்பக்குவம் பெற்றவர்கள் வாழும் குடும்பங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றது. இத்தகைய குடும்பங்கள் உள்ள நாடு அமைதியில் நிலைபெற்று விடும். இது போன்ற நாட்டில் உள்ள மக்களனைவரும் தங்களது உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் அன்பு செலுத்தும்போது, அவர்கள் தங்களை விட மேல் நிலையில் வாழ்பவர்களை மதித்துவந்தால் வானகத்தான் குடைகீழ் எங்கும் அமைதி நிலவும் என்று அவர் குறிப்பிடுகிறார்.