பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கன்பூசியஸின்


இந்த எட்டு திரிக்கிரமச் சித்திரம், பழங்காலத்தில் ஓர் ஆமை ஓட்டின் குறிகளிலிருந்து புராண காலத்தில் மாமன்னர் ஒருவரால் உருவானதாகக் கூறுகிறார்கள்.

அதற்கு பின்னர், 'சென்' வம்சத்தை உருவாக்கிய மாமன்னராலும், அவருடைய புதல்வராலும் எட்டு திரிக்கிரமத்திற்கு பொருள் வியாக்கியானங்கள் கூறப்பட்டன; அவையே உருவக் கிரந்தம், சகுணம், சோதிடம், ரகசிய சாஸ்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படையானவை.

அந்த வியாக்கியானங்கள் விளைவாக, யிங்-கிங் எனப்படும் பரிணாம இலக்கியம்-அல்லது பேத நூல் தோன்றியது என்று சீன வம்சத்தவர்கள் எண்ணுகிறார்கள்.

மறை ஞானி கன்பூசியஸ்தான் இந்த மறை பொருள் சாஸ்திரமான் அந்த நூற்களுக்கு முதன் முதலில் புது தத்துவ வடிவம் கொடுத்திருக்கிறார். இது மட்டுமன்று புனிதத் திருமறைகளாகவும், பண்டைய காலப் பேரிலக்கியங்களாகவும் போற்றப்பட்ட சீன நூல்கள் அனைத்தையும் கன்பூசியஸ் ஆராய்ந்து அவற்றைத் தொகுத்து மனித சமுதாயக் கண்ணோட்டத்தில் நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.

அந்த நூல்களாலும், அவரது போதனைகளாலும் ஒரு புதிய கொள்கையைப் பரப்பி, உலகத்தின் முன் ஒரு மாபெரும் இலட்சியத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார். அதுதான் கன்பூசியனிசம்!

கன்பூசியசுக்கு முன்பே சீன நாட்டின் பல மகா மேதைகள் தோன்றி பலவிதமான கொள்கைகளைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், சீன நாட்டின் மக்களது மனோநிலைகளிலும் தத்துவஞான நூற்களிலும் பரவியிருக்கும் தத்துவங்களில் மிகவும் முக்கியமானவை அந்த நான்கு நூல்கள் தான். அந்த நூல்கள் எவை?