பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31

யத் ருஷ்யா சுற்றுப் பயணத்தின் போது-மாஸ்கோ விழா ஒன்றிலே எடுத்துக்காட்டி பெருமைபட்டு இந்திய பண்பியலுக்கு ஆதரவு காட்டவில்லையா?

எனவே, கணியன் பூங்குன்றனார் தத்துவத்தைத் தான், இரண்டாயிரத்து நூறு ஆண்டுகட்கு முன்பிருந்த கன்பூசியஸ் என்ற ஞானியும் சிந்தித்தார்; அதைக் 'கன்பூசியனிசம்' என்று இன்று நாம் அழைக்கின்றோம் அவ்வளவுதான்.

ஞானி கன்பூசியசின் இந்தத் திட்டம், கனவோ கற்பனையோ என்று எண்ணக்கூடாது. இது ஓர் உலகப் பொதுத்திட்டம் மக்களின் சிந்தனையும் செயல்பாடுகளும் சரியான ஒத்துழைப்புக்களும் இருந்தால் இந்த உலகில்-இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரக்கூடிய ஒன்று தான் வரவேண்டும் என்றுதான் கணியன் பூங்குன்றனாரும், கன்பூசியசும் ஆசைப்பட்டார்கள். இந்த ஆசையை உலக மக்களின் கைகளிலே அவர்கள் ஒப்படைத்தார்கள். வெற்றியும் தோல்வியும் உலகம் கையில்தானே!

இந்த உலகப் பொதுத் திட்டம், மனிதர்களை ஓர் அமைப்பின் கீழ் அடிமைப் படுத்திடும் திட்டம் அல்ல! மனிதர்கள் தாங்களாகவே விரும்பி உருவாக்கும் திட்டமாகும். இதற்கு அடிப்படை ஒரு பொது அறநெறி; மனிதனின் செயல்! அந்த அறநெறிகளோடு மனித முயற்சிகளும் நடந்தால் உலகம் ஒரே சமுதாயமாக, மனித சமுதாயமாக மாறும் என்பது திண்ணம்!

பொதுநல ராஜ்ஜியம் தோன்றக் காரணம் என்ன!

கன்பூசியஸ் பிறந்தபோது, சீன நாட்டின் மத்திய ஆட்சி பலங்குன்றி சிதைந்துக் கிடந்தது! அப்போதிருந்த அரசுகள், நிலவுடைமைச் சீமான்கள், குறுநிலத் தலைவர்கள் அவர்களது விருப்பம்போல சர்வாதிகாரிகளானார்கள். தான்தோன்றித் தர்பார் நடத்தினார்கள்.