பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

33


அதனால், ஒருங்கற்றுக்கிடக்கும் உலகை சீர்திருந்திட மனித சமுதாயத்தின் கடமைகளைப் பற்றி மக்களிடையே பேசினார். அதற்கான அறநெறிகளை உருவாக்கினார்.

மனித உறவுகள் இடையே உள்ள பொறுப்புகள், அரசுக்கும்-மக்களுக்கும் உள்ள உறவுத் தொடர்புகள்; அதற்கான முறைகள்; ஒரு தனிக் குடும்பத்தின் உறுப்பினரிடையே உள்ள-உணர்வு, உறவு முறைகள், எல்லாவற்றையும் தாண்டி அவர், நோய் கண்டவனுக்குக் கொடுக்கும் மருத்துகளைப் போல இந்த சீர்திருத்தங்களை வழங்கினார்!

கன்பூசியசின் இலட்சியத்தின்படி, வானகம், அரசாங்கம், பொதுஜனம் இவை மிக உயர்ந்த முப்பெரும் சக்திகள் என்பதை உணர்த்தினார். மனித வாழ்க்கைக்குரிய கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் வானகம் உண்டாக்குகிறது. அந்தச் சட்டங்களை அரசு அமுலுக்குக் கொண்டு வருகிறது. ஆணும் அதிகாரிகளும், மக்களும் அந்தச் சட்டங்களுக்கு ஏற்றவாறே வாழ்கிறார்கள்.

இவை மதத்தால் உருவான ரகசியமல்ல; இயற்கையின் உருவெளித் தோற்றத்திலும், மனித சமுதாய வடிவிலும் அவை தானாகவே உருவாயின. அதற்கான அறிவு, தலைமுறை தலைமுறையாக உலகில் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதனால், இந்தக் கொள்கையை நிலை நிறுத்தும்போது, வானகத்துச் சட்டங்களுக்கும்-பூலோகத்து மனிதனுக்கும் இடையே மதகுருக்கள் என்ற பெயரில் தனியொரு சாதிப் பிரிவுத் தேவையில்லை. அரசாங்கமும், மக்களும் தங்களுக்கென தனி மதச் சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியாது என்று கன்பூசியஸ் மக்களுக்கும் பகிரங்கமாக எடுத்துரைத்தார்.

மக்கள் நலன், வாழ்க்கை வளம், இந்த இரண்டின் அடிப்படை நோக்கில்தான் ஓர் ஆரசு அமைக்கப்படல்-