பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39


கல்வித் துறையில் பிறப்பிற்கும், பணத்திற்கும் இடமில்லை என்று உலகத்தில் முதன் முதலாகக் கூறியவர் கன்பூசியஸ்தான்! அதுமட்டுமல்ல; அவரவர் தகுதிக்கும் திறனுக்கும்தான் முதல் இடம் என்று எவருக்கும் அஞ்சாமல் அவர் செயல்படுத்திக் காட்டிய உலகத்துமுதல் மனிதரும் கன்பூசியஸ்தான்!

எல்லா வகையிலும் சீர் கெட்டுச் சிதைந்துக் கிடந்த சீன நாட்டு மக்களின் ஏழைகள், நடுத்தரத்தினர் உட்பட்ட பொது மக்களில் பலர், கன்பூசியஸ் திட்டப்படி திறமையான வாலிபர்கள் தாழ்ந்த நிலையில் பிறந்திருந்தாலும், அவர்கள் பணமில்லாத ஏழைகளாக இருந்திருந்தாலும் தங்களது படிப்படியான முயற்சிகளால் மிகத் திறமையானக் கல்வியாளர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கச் சம்பவமாகும்.

'ஒரு விஷயத்தில், ஒரு மூலையை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பிறகு, மற்ற மூன்று மூலைகளையும் தானாகவே கண்டு பிடிக்க முடியாதவர்களுக்கு நான் மேலும் கல்வியைப் போதிக்க மாட்டேன்' என்று கூறியவரும் அவர்தான்!

ஆசிரிய தன்மை அல்லது போதனாமுறை என்பது படிக்கவரும் மாணவன் தலைக்குள்ளே அறிவுகளைத் திணிப்பதல்ல; அவன் சுயமாகச் சிந்திப்பதுதான் அறிவு என்று கல்வித்துறைக்கு அறிவுறுத்தியவரும் கன்பூசியஸ் தான்!

அறிவிற்குரிய வழிகளை ஆசிரியர்கள் கற்பிப்பர். ஆனால்; உனக்கு உண்மையிலே அது தெரியும் என்றால் தெரியும் என்று சொல்; தெரியாது என்றால் அது தெரியாது என்று சொல்லி, உனது அறியாமையை ஒப்புக் கொள்' இதுதான் அறிவுக்குரிய அடையாளம் என்று அறியாமைகளைப் பகிரங்கமாகத் தைரியமாக, செயல்படச் சொன்னவர் கன்பூசியஸ்!

"இன்றைய முற்போக்குக் கல்வி என்று உலகத்தவரால் கற்பிக்கப்படும் இருபத்தோராம் நூற்றாண்டைய கல்வி