பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கன்பூசியஸின்


இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழவேண்டும். பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவன் தனது செயல்களையும், அதற்குரிய போக்குகளையும் அமைத்துக் கொண்டு, தெய்வீகச் சட்டத்தின் ஒளிக்கு ஏற்றவாறு உண்மையான பாதையைக் கண்டு நடக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும்.

மேலே உள்ள வானகம் என்பது இயற்கையின் சக்தி; ஒழுக்கச் சக்தி, இரண்டும் இணைந்த ஒரு சக்தியாகும். அந்தச் சக்திகளிடம் இருந்துதான் மனிதனுக்குரிய நன்மையும்-தீமையும் வருகின்றன.

மனிதன் உயிர் வாழும்போது, இயற்கையும் வாழ்க்கையையும் இரண்டும் இணைந்ததாகும். அவை ஒன்றில் ஒன்று இணைந்தவை. எனவே, மனிதனையும், வானகத்தையும் ஒன்றுபடுத்தும் இந்த லட்சியம் கன்பூசியசின் மகத்தான் ஒரு சிந்தனையாகும்.

ஒரு சத்திய நெறியின் கட்டளைக்குள் மனித ஒழுக்கங்களை ஒழுங்கு படுத்துவது ஒரே அறநெறியின் கட்டளைக்குள் மனிதர்கள் அனைவரையும் பொறுப்புள்ளவர்கள் ஆக்குவது இந்தக் கன்பூசியசின் கொள்கைகளோடு தற்காலச் சமுதாயத் திட்டக் கொள்கைகளையும் ஒப்பிட்டு; பார்க்க வேண்டியது ஒரு அவசியமாகும்.

எல்லா மனிதர்களையும் வானகத்தின் முன்பு; பொது மனித சமுதாயக் கூட்டமாகக் கொண்டு வந்து கன்பூசியஸ் நிறுத்துகிறார். மக்களின் தன்மைகளையும், சக்திகளையும் பக்குவமான ஒரு திசையை நோக்கிப் பண்படுத்தி வளர்ப்பதற்கான வழிகளை அவர் வகுத்துள்ளார். முறையான ஓர் உலக ஒழுங்கிற்கு மனிதர்களைப் பாதுகாவலராக்கி, மக்கள் கடமைகளையும், பொறுப்புக்களையும் அலர் கவனப்படுத்துகிறார்,