பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழ் மகன் சிதம்பரனார் இறந்துவிட்ட செய்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற இடங்களிலும், ஏன் தமிழ்நாடு முழுவதுமே பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து தங்களுடைய கண்ணீரஞ்சலியைச் செலுத்தினார்கள். தமிழ்நாடே தனது தனிப்பெருந்தலைவருக்கு மரியாதை காட்டி இறுதி வணக்கத்துடன் அஞ்சலி செய்தது.