பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3.வ.உ.சி. புலமை வல்லமை
இராஜாஜி குறள் கற்க ஆசை!

வயது 23 சிதம்பரத்துக்கு! தந்தை உலகநாதன் பிள்ளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பி, திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய பிள்ளை என்பாரின் மகள் வள்ளியம்மை என்பவரைப் பார்த்து மணம் செய்து வைத்தார் தமிழ் படித்த பெண் வள்ளியம்மை. தமிழ் இலக்கிய வகைகளை நன்கு கற்றுத் தேர்ந்த கன்னிகை. இந்த மாதரசி, திருக்குறள் போன்ற தமிழ்மறை நூல்களை தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை வைகறையில் எழுந்து அதனதன் பொருளுடன் ஓதி கற்றுணர்ந்த தமிழ்க் கன்னியாக இருந்தார்.

அந்தப் பெண் சிதம்பரனாருடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு துன்பம் வந்த காலத்து இன்பமளிக்கும் ஊன்றுகோலாகவும், அறுசுவை உணவளிப்பதில் அன்னை போலவும், ‘நன்றும் தீதும் பிறர் தர வாரா’ என்பதைப் படித்துணர்ந்த பாவையாதலால் வ.உ.சி. பெயருக்கும், புகழுக்கும் ஏணியாக விளங்கி இல்லற வாழ்வை நல்லறமாக நடத்தி வந்தார்.