பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

гышшва яси әсрәлили штворы —=ы айтылығы ա4 / , நடப்பது நடக்கட்டும், நடப்பது நடந்தே தீறும். ஆவது ஆகட்டும், முடியும் காலத்தில் முடிவது முடிந்தே தீறும். அழியக் கூடியது அழிந்து சிதைந்து போவது உறுதி. அதை ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது. அதைப் பற்றி உன்னைக் காட்டிலும் தெளிவாகத் தெரிந்தவர் வேறு யார் உளர். நீ வருந்த வேண்டாம். எனக்காக நீ இரக்கம் கொள்ளவும் வேண்டாம். நீ போகலாம் என்று கூறி வீடணனைக் கட்டித் தழுவிக் கண்ணிர் விட்டு அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டான். “ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்” என்று கும்பகருணன் கூறி முடிக்கிறான். இத்துடன் கும்பகருணன் - வீடணன் உரையாடல் முடிகிறது. வீடணன், கும்பகருணனிடம் பேசி விட்டு இராமனிடம் திரும்பி வந்து சொல்வதெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவன் அசைய வில்லை. அவன் குலத்து மானம் தீர்ந்திலன்” என்று கூறினான். “எய்திய நிறுதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய் உய்திறன் உடையார்க் கன்றோ அறன்வழி ஒழுகும் உள்ளம் பெய்திறம் எல்லாம் பெய்து பேசினேன் பெய ரும் தன்மை, செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறி தும்” என்றான். திரும்பி வந்து அவ்வாறு கூறிய வீடணனிடம் இராமன் மிகவும் அமைதியாகவும் உருக்கமாகவும், “உன் கண் முன்னாலேயே