பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<ыйшөбі — 62Q, «Qдаятшй шптіsosv –ost cosofkитчейі 558 “நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடைவாய் நக்கப் புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக் கின்ற கண்ணன் மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சினத்து மேல் வீங்கி சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான்” எஞ்சியுள்ள அரக்கர் படை அனைத்தையும் திரட்ட இராவணன் ஆணையிட்டுப் போருக்கு மீண்டும் தயாரானான். “பூதரம் அனைய மேனிப்புகை நிறப் புருவம் செந்தி மோதரம் என்னும் நாமத்து ஒருவனை முகத்து நோக்கி ஏதுளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை யாதையும் எழுகென்று ஆணை மணி முரசு ஏற்று கென்றான்” ஈசனை வணங்கி பூசைகள் முடித்து வேண்டியவர் களுக்கெல்லாம் தானங்கள் வழங்கிப் போருக்குத் தயாரானான். "ஈசனை இமையா முக்கண் இறைவனை இருமைக்கு ஏற்ற பூசனை முறையில் செய்து திருமறை புகன்ற தானம் வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க் கெல்லாம் ஆசற நல்கி ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான்”