பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ғыbuspub шотёр —{yptb. ||3 பலரும் மனிதனைச் சாடினார்கள். சேனைத் தலைவன் கூறுகிறான். 'வஞ்சனை மனிதரை இயற்றி வாள்நுதல் பஞ்சென மேல் அடி மயிலைப் பற்றுதல் அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது தஞ்சென உணர்ந்திலை உணரும் தன்மையோர்” “மனிதரை வஞ்சித்து அந்தப் பெண் க் கொண்டு வந்தது சரியல்ல. அது அஞ்சினர் தொழில் என்று கூறினேன். சூர்ப்பனகை மூக்கறுபட்ட போதே கரன் முதலானோர் கொல்லப்பட்ட போதே அந்த மனிதக் கள்வர்களைக் கொன்றிருக்க வேண்டும்” என்று கூறுகிறான். முதலமைச்சன் மகோதரன் 'இடுக்கிவண் இயம்புவதில்லை, ஈண்டு எனை விடுக்குவை ஆம் எனில் குரங்கை வேரறுத்து ஒடுக்கரு மனிதரை உயிருண்டு உன்பகை முடிக்குவன் யான், என முடியக் கூறினான்.” வச்சிரதத்தன் என்பவன் போய் இனி மனிதரைக் குரங்கைப் பூமியில் தேயுமின், கைகளால் தின்மின்” என்று உத்தரவிடும் படி கூறினான். துன்முகன் என்பவன் “திக்கயம் வலி இலதேவர் மெல்லியர் முக்கணான் கயிலையும் முரண் இன்று ஆயது, மக்களும் குரங்குமே வலியவாம் எனில், அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே’ என்று கூறுகிறான். முரண்பாடுகள் மிக்கக் கும்பகர்ணன் கீழ்க்கண்டவாறு கூறுவதைக் கம்பன் மிக அழகாகச் சித்தரித்துக் காட்டியுள்ளார். “ஆசில் பரதாரமவை அம் சிறையடைப்போம் மாசில் புகழ் காதல் உறுவேம் வளமை கூறப் பேசுவது மானம், இடை பேணுவது காமம் கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்”