பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

выдшей -еесъ задалили иттерои — на болотаей 199 என்று குறிப்பிடுகிறார். சீதையை இராவணன் துக்கிக் கொண்டு போய் விட்டான். இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிக் கொண்டுத் தெற்கு நோக்கிச் செல்கிறார்கள். வழியில் சடாயு குற்றுயிராய்க் கிடப்பதைக் காண்கிறார்கள். கழுகு வேந்தன் சடாயு மூலம் சீதையை அரக்கன் கொண்டு செல்லும் செய்தியை அறிந்தார்கள். இராமன் மிகவும் கலங்கி மனம் வருந்தி நின்றான். “நான் பிறந்து என்ன பயன், எல்லாவற்றையும் இழந்தேன்” என்று மனம் நொந்து கொள்கிறான். இலக்குவன் தைரியமாக அண்ணனுக்கு ஆறுதல் கூறி “கவலைப் பட வேண்டாம், விதியினால் இந்தப் பழுது ஏற்பட்டு விட்டது. அரக்கர்களைக் கொன்று கொடுந்துயர் தீர்ப்போம்” என்று கூறி இராமனைத் தேற்றுகிறான். "அறம் தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் துறந்தனென் தவம் செய்கேனோ? துறப்ப னோ உயிரைச் சொல்லாய் பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்றதாதை இறந்தனன், இருந்து ளேன் யான் என் செய்கேன் இளவல்’ என்று இராமன் தன் துயரத்தை வெளிப்படுத்துகிறான். இலக்குவன் மிகுந்த நிதானத்துடன் இராமனுக்கு ஆறுதல் கூறுகிறான். 'என்றலும் இளைய வீரன் இறைவனை இறைஞ்சியாண்டும் வென்றியாய்! விதியின் தன்மை பழுதில (விளைந்தது அன்றோ நின்று இனி நினைவது என்னே! நெருங்கி (அவ்வரக்கர் தம்மைக் கொன்றபின் அன்றோ வெய்யக் கொடுந்துயர் குளிப்பது?” என்றான்