பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт –“РФ «Qдэтил7 uлгisos» — егу. «Rofkалғай7 203 இலக்குவ, சகோதரர்களின் சிறப்பும் பற்றி அனுமன் வாய் மொழியாகக் கம்பன் மிக அழகாகச் சொல்கிறார். சிறிய பல மன்னர்களெல்லாம் தொழுது போற்றக் கூடிய மாமன்னன் தயரதன் தனது புயவலிமையால் உலகையெல்லாம் ஒரு முகப்படுத்தி, ஒரு நிலைப் படுத்தி ஒரு வழிப்படுத்தி, வாழ்வதற்கு வழி வகுத்து அரசு செலுத்தும் ஆழியார் மைந்தர் என்றும், அவர்கள் பேரறிவாஹர் அழகு மிக்கவர்கள், ஊழியார் - காலத்தை வென்றவர்கள் உனக்கு எளிதில் அரசு தந்து உதவுவார்கள் என் க்கிரீவனுக்கு ஒரு முதல் நம்பிக்கையை ஊட்டி அனுமன் மேலும் கூறுகிறான். "நீதியார், கருணையின் நெறியினார் நெறிவயின் பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் போதியாது அளவிலா உணர்வினார் புகழினார் காதி சேய்தரு நெடும் கடவுள் வெம்படையினார் ” நீதி மிக்கவர்கள், கருணை நெறி கொண்டவர்கள், ஒழுக்க நெறியிலிருந்து மாறு படாதவர்கள், எவரினும் பெருமை மிக்கவர்கள் அறிவுமிக்கவர்கள், புகழ்மிக்கவர்கள், வல்லமை மிக்க விசுவாமி த்திரன் (கெளசிகன்) கொடுத்த தெய்வீகப் படைகளை ஏந்தியவர்கள் என்றெல்லாம் அந்த சகோதரர்களின் பெருமைகளையும் சிறப்புகளையும் அனுமன் விவரித்துக் கூறுகிறான். தாடகை வதம் முதல் கரன் வதை வரையிலுமுள்ள இராமனுடைய வீரத்தையும் எடுத்துக் கூறினான். இங்கு, கம்பன் அனுமன் வாயிலாக மன்னராட்சி காலத்தின் வளர்ச்சி தத்துவத்தை பேரரசுகளின் வளர்ச்சியின் சிறப்புகளை மிக நுட்பகமாக விரித்துக் கூறும் சமுதாய இயல் கருத்துக்களைக் Ե5T6ԾԾT6ն)ITԼՈ இராமனும், சுக்கிரீவனும் நட்பு கொண்ட பின்னர், இராமன் சுக்கிரீவனைப் பார்த்து “நீ வாலியை வலிய அழைத்துப் போர் செய், நான் தனியாக நின்று வாலி மீது கணை ஏவிக் கொல்வேன் என்று கூற சுக்கிரீவன் வாலியைப் போருக்கழைத்தான். அதைக் கேட்ட வாலி வேகத்துடன் போருக்கு எழுந்தான். வாலியின் மனைவி தாரை தனது கணவனைத் தடுத்து, இராமன் என்பவன் சுக்கிரீவனுக்குத் துணையாக வந்துள்ளான், அவன் உன் உயிரை வாங்கி விடுவான்