பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


தனக்குக் கிடைத்த அரசை ஏற்க மறுத்து விட்டான். ஆனால், கிட்கிந்தை அரசியலில் சண்டை இருந்தது. இலங்கையில் சமுதாய அமைப்பு இருந்தது. உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இலங்கை அரசன் இராவணனுக்காகத் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். விபீடணன் மட்டும் விதிவிலக்கு. தமக்குரிய அரசையும் துறந்த பரதனின் புகழ் காவியத்தில் சிறந்து விளங்குகிறது. பரதன் புகழ் என்றும் நின்று விளங்கும். இதனை இராமன்,

“எத்தாயர் வயிற்றிலும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதலுண்டோ?”

(கம்பன்)

என்று கூறுவதால் அறியலாம்.

குகனும்,

“தாய் உரை கொண்டு தாதை
உதவிய தரணி தன்னை,
‘தீவினை’ என்ன நீத்து
சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்ற போழ்து,
புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின்கேழ்
ஆவரோ, தெரியின் அம்மா!”

(கம்பன்-2337)

என வியந்து போற்றுகின்றான்.