பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற்பதிப்புக்கு அடிகளார் எழுதிய
முன்னுரை

சென்னை, கம்பன் கழகத்தார் ஏவி.எம். அறக் கட்டளையின் சார்பாக கம்பராமாயணச் சொற்பொழிவு நடத்தி வருகின்றனர். ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் காரைக்குடியில் பிறந்து வளர்ந்தவர். திரைப்பட உலகச் சக்கரவர்த்தியாக விளங்கியவர். தரமான படம் எடுப்பதில் புகழ் பெற்றவர். நல்ல அன்பர்; இலக்கியங்களை அனுபவிப்பவர். ஆதலால், சென்னை கம்பன் கழகத்தின் வழி ஆண்டுதோறும் கம்பராமாயணத்தைப் பற்றி ஓர் ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக அறக்கட்டளை நிறுவியுள்ளார்.

சென்னை கம்பன் கழகச் செயலாளர் கம்பன் அடிப் பொடியின் அடிப்பொடி என்று பெருமையுடன் அழைக்கப் பெறும் திரு. பழ. பழனியப்பன் அவர்கள் இந்த ஆண்டு, கம்பன் கழகத் தலைவர் - கம்பன் புகழ் பரப்பும் நீதியரசர் எம்.எம். இஸ்மாயீல் அவர்கள் இசைவுடன் நமக்கு வாய்ப்பளித்தார். எளிதென ஏற்றுக் கொண்டோம். ஆனால், எழுதும்போதுதான் காலமும் பழ.பழ. அவர்கள் மனமும் நெருக்கடி தந்ததை உணர முடிந்தது. கம்பன் கழகத்தின் உயர் மரபுகளில் ஒன்று காலம் போற்றுதல். குறித்த காலத்தில் எழுதித் தர இயலவில்லை. மிகுந்த இடர்ப்பாட்டுடன் சொற்பொழிவு நாளன்றுதான் எழுதி முடித்தோம். கம்பன் கழகத்தினரும் பதிப்புத்துறைக்