பக்கம்:கம்பன் கலை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரணில் முழுமுதல் 8 177 ஒளியிலே இருளும், இருளிலே ஒளியும் கலந்து நிற்கின்றன என்பதையும் நாம் அறிய முடியும். இவ்வாறு ஆழ்ந்து நோக்கினபொழுது முழுத் தீமையென்றும் முழு நன்மையென்றும் கூறத்தக்கது ஒன்றும் இல்லை என்பதை அறிந்தான். எனினும், உலகியல் நிலையில் தீமை என்று கூறத்தக்கது இருக்கத்தானே செய்கிறது. அமைதியைக் கெடுக்கும் தீமை ஏன் இருக்கவேண்டும் என்ற வினாவை எழுப்பினான் மனிதன். அடுத்தது இத்தீமையை யார் உண்டாக்கினார்கள் என்ற வினா எழுந்தது. நன்மையை யார் படைத்தார்களோ அவர்களே தீமையையும் படைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் மனிதனுடைய ஆராய்ச்சி கொண்டு செலுத்தியது. இன்னும் அதுபற்றிச் சிந்திக்கும்பொழுது படைப்பின் சிறப்பே அதுதான் என்றுகூட நினைக்க வேண்டி வந்தது. அப்படியானால், படைத்தவன் இயல்பு யாது என்ற வினாத் தோன்றிற்று. முரண்பாட்டைப் படைத்துவிட்ட அவனும் முரண்பாடுடையவன்தானா? ஆம். ஆழ்ந்து ஆராயாமல் மேலாக நின்று நோக்கும்பொழுது படைத்தவனிடமும் முரண்பாட்டைக் காணலாம். மேலாகக் காணும்பொழுது தோன்றும் முரண்பாட்டை முழு முதலிடமுங்கூடக் காண்கிறவர் காட்சியைக் கம்பநாடர் இதோ கூறுகிறார்: தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே' மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; - வெளியோடு இருளில்லை; மேல் கீழும் இல்லை; மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; - முதல்இடையோடு ஈறு இல்லை; முன்னோடு பின் இல்லை; தேவாஇங்கு இவ்வோ நின்தோன்று நிலை என்றால் (கம்பராமா சாபங்கர், 27, 28)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/188&oldid=770704" இலிருந்து மீள்விக்கப்பட்டது