பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98


மேரு மலை போன்ற கம்பீரத் தோற்றம் கொண்ட இராமன் அம்பு விட்ட உடனே என்னாயிற்று? ஊழிக் காலத்திலே இடித்து முழங்கிக் கல்மாரி பொழிய எழுந்த மேகமானது மின்னலோடும் இடியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் தாடகை.

𝑥𝑥𝑥𝑥

பொன் நெடு குன்றம் அன்னான் – பொன்மயமான பெரிய மேருமலை போன்ற தோற்றமுடைய இராமனது; புகர்முகம் – கூரிய வாய் கொண்ட; பகழி எனும் அம்பாகிய; மன் நெடுங்கால வன்காற்று—மிகப் பெரிதாகிய ஊழிக் காலத்திலே தோன்றும் வலிய காற்று (சண்டமாருதம் அடித்தலும்—தாக்கிய உடனே; கடை உகத்து—யுகமுடிவு காலத்தில்; வானில்—வானிலே; இடித்து—பேரிடி இடித்து; கல்நெடுமாரி பெய்ய — கல்மழை பெய்யும் பொருட்டு எழுந்த; மேகம்—மேகமானது; மின்னொடும் அசனியோடும்—மின்னல் இடியுடன்; வீழ்வதே போல—கீழே வீழ்வது போல; வீழ்ந்தாள்—விழுந்து விட்டாள்.

𝑥𝑥𝑥𝑥

கண்டார் முனிவர். மகிழ்ந்தார். படைக்கலங்கள் பல அளித்தார். அவற்றின் அதிதேவதைகளையும், அவற்றிற்கு ஆன மந்திரங்களையும், இராமனுக்குக் கற்பித்தார்.

அப்படைக் கலங்களும் மகிழ்ச்சியுடன் இராமனை அடைந்தன. எந்த நேரமும் ஏவல் செய்யக் காத்திருப்பதாகக் கூறின.

பிறகு, மூவரும் வழிநடந்து இரண்டு காத தூரம் சென்றனர். அங்கே ஓர் ஆறு. அதன் பெயர் கெளசிகி என்பது. அதன் வரலாறு என்ன என்று கேட்டான் இராமன். முனிவர் சொன்னார்;