பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118


இத்தகைய வளம் மிக்க விதேக நாட்டின் ஊடே மூவரும் சென்றனர்; மிதிலை நகரின் புறமதிலை அடைந்தனர். அங்கே வெட்ட வெளி ஒன்றிலே உயரமான கருங்கல் மேடு ஒன்று கண்டனர்.

கெளதம முனிவரின் பத்தினியாகிய அகலிகை சாபம் பெற்றுக் கல் உருக் கொண்டு கிடந்தாள்.

𝑥𝑥𝑥𝑥

இளைய நாடு இடை– இத்தகைய வளம் மிக்க விதேக நாட்டின் இடையே; இனிது சென்று – மகிழ்ந்து மூவரும் சென்று; இஞ்சி சூழ்மிதிலை – மதில்கள் சூழ்ந்த மிதிலை மாநகரின்; புனையும் நீள்கொடி அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த கொடிகளை உடைய; புரிசையின் புறத்து – வெளி மதிலின் புறத்தே; வந்து இறுத்தார்—வந்து அடைந்தனர். ஓர் வெள்ளிடை— (அங்கே) ஒரு வெளி இடத்திலே; மனையின் மாட்சியை அழித்து – மனைவிக்குரிய மாண்பு போக்கிக் கொண்ட; உயர் மாதவன் பன்னி—பெருந்தவ முனிவரின் பத்தினியாகிய அகலிகை, கனையும் மோடு உயர் கருங்கல்—மிக உயர்ந்து செறிந்து தோன்றிய கருங்கல்லாயிருக்க; கண்டார்—பார்த்தனர்.

𝑥𝑥𝑥𝑥


ண்ட கல் மிசைக் காகுத்தன்
        கழல் துகள் இதுவ
உண்ட பேதைமை மயக்கற
        வேறு பட்டு உருவம்
கொண்டு மெய்யுணர்பவன்
        கழல் கூடியது ஒப்பப்
பன்டை வண்ணமாய் நின்றனர்
        மாமுனி பணிப்பான்.