பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140


அயோத்திக்குத்‌ தூதுவரை அனுப்பினான்‌ ஜனகன்‌. இராமன்‌ வில்‌ ஒடித்ததையும்‌ சீதையைத்‌ திருமணம்‌ செய்து கொடுக்கத்‌ தான்‌ சித்தமாய்‌ இருப்பதையும்‌ தெரிவித்தான்‌. தசரத மன்னனை அழைத்தான்‌. அவ்வாறே தூதுவர்‌ சென்றனர்‌. தசரத மன்னனுக்கு ஜனசன்‌ கூறியவற்றைத்‌ தெரிவித்தனர்‌. சேட்டான்‌ தசரத மன்னன்‌. மகிழ்ந்தான்‌. மந்திரி பரிவாரங்களுடன்‌ மிதிலைக்குப்‌ புறப்பட்டான்‌.

மிதிலை மாதகர்‌ திருமண விழாக்கோலம்‌ பூண்டது.

𝑥𝑥𝑥𝑥

மிதிலை வாழ்‌ மக்கள்‌ நகர்‌ எங்கும்‌ தோரண கம்பங்களை நட்டார்கள்‌. தூண்களை உறையிட்டு அலங்கரித்தார்கள்‌. எங்கும்‌ பூரணகும்பம்‌ வைத்தார்கள்‌, சித்திரச்‌ சீலைகளால்‌ அணிசெய்தார்கள்‌. வீடுகளை மணிகளால்‌ அழகு செய்தார்கள்‌. அந்தணர்க்கு அளிக்கும்‌ பொருட்டு இன்சுவை அமுது தயாரித்தார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

தோரணம்‌ நடுவாரும்‌—தோரண கம்பங்களை அவற்றிற்குரிய இடங்களிலே நடுபவரும்‌; தூண்‌ உறை இடுவாரும்‌—பட்டினால்‌ ஆன உறைகளைத்‌ தூண்களுக்கு இடுவாரும்‌; எங்கும்‌—எவ்விடத்தும்‌; பூரண குடம்‌—பூரண கும்பங்களாலும்‌; புனை துகில்‌—சித்திரச்‌சீலைகளாலும்‌; புனைவாரும்‌—அழகு செய்பவர்களும்‌; கார்‌ அணி நெடுமாடம்‌—மேகங்கள்‌ தங்குவதால்‌ அழகு தரும்‌ நீண்ட உயர்ந்த மாளிகைகளிலே; கதிர்‌ மணி அணிவாரும்‌—ஒளிமிக்க மணிகளால்‌ அழகு செய்வாரும்‌; ஆரணம்‌ மறைவாணர்க்கு பல சாகைகள்‌ கொண்ட வேத நெறிவாழ்‌ அந்தணர்க்கு (அளித்தற்‌ பொருட்டு) இனிது அழுது அடுவாரும்‌—இனிய உணவு சமைப்போரும்‌.

𝑥𝑥𝑥𝑥