141
அன்ன மெல் நடையாரும்
மழு விடை அனையாரும்
கன்னி நல் நகர் வாழை
கமுகொடு நடுவாரும்
பன்னரு நிரை முத்தம்
பரியன தெரிவாரும்
பொன் அணி அணிவாரும்
மணி அணி புனைவாரும்
அன்னம் போன்ற நடை கொண்ட இளம் பெண்களும்; காளை போன்ற இளம் பிள்ளைகளும், வாழைகமுகு இவற்றைக் கொண்டு வந்து அவற்றிற்குரிய இடங்களில் நட்டார்கள்; பருமனான முத்து ஆரங்களைத் தெரிந்து எடுத்து அணிந்து கொண்டார்கள்; பொன் ஆபரணங்களாலும், இரத்தின ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.
𝑥𝑥𝑥𝑥
கன்னி நல் நகர்—இளமை நலம் மிக்க அந்த நகரத்திலே; அன்னம் மெல் நடையாரும்—அன்னம் போன்ற மெல் நடையுடைய இளம் பெண்களும்; மழவிடை அனை யாரும்—இளங்காளைகள் போன்ற இளைஞர்களும்; வாழை—வாழை மரங்களை; கமுகொடு – பாக்கு மரங்களோடு—கொண்டு வந்து நடுபவராயிருத்தனர்; பன்ன அரு–விலை மதிக்க முடியாத; நிரை முத்தம்—வரிசையான முத்து வடங்சளிலே; பரியன தெரிவாரும்—பருமனானவற்றை (அணிந்து கொள்ளம் பொருட்டு) தெரிந்து எடுப்பவராயிருந்தனர்; பொன் ஆணி அணிவாரும். பொன்னாலாகிய அணிகலன்களால் தங்களை அலங்கரித்துக் கொள்பவராயிருந்தனர்; மணி அணி புனைவாரும்–மற்றும்