155
வணங்கிப் புறப்பட்டனர். மற்றைய அரச குமாரர்களும், பிற மக்களும் சூழ்ந்து சென்றனர். மிதிலை வாழ் மக்கள் வழியனுப்பி வைத்துப் பிரியா விடை நல்கி உயிர் பிரிவதே போன்ற துயரக் கடலில் மூழ்கினார்கள்.
𝑥𝑥𝑥𝑥
உரவோன்—அறிவாற்றல் மிக்க தசரத மன்னன்; தன் மக்களும்—தன் புதல்வர்களும்; மருமக்களும்— தன் மக்களின் மனைவியராகிய மருமக்களும்; நனிதன் கழல் தழுவ—தன் திருவடிகளை நன்கு வணங்கித் தொடர்ந்து வரவும்; மன் மக்களும்—அரச குமாரர்களும்; அயல் மக்களும்— அவர்கள் அல்லாத பிற மக்களும்; வயின் மொய்த்திட— பக்கங்களிலே வந்து நெருங்கவும், மிதிலை தொல் மக்கள்— மிதிலை நகரிலே வாழும் பழைமையான குடிமக்கள்; தம் மனம் உக்கு—தங்கள் மனம் உடைந்து; உயிர் பிரிவு என்பது ஓர்— (தம் தம் உயிர் பிரிவதே போலும்) துயரின் வன்மம் கடல் புக — வருத்தமாகிய கொடிய கடலிலே மூழ்கவும்; உய்ப்பது ஓர் வழி—தனது நகருக்குச் செல்லும் வழியிலே; புக்கனன்—செல்வான் ஆயினன்.
𝑥𝑥𝑥𝑥
முன்னே நெடுமுடி மன்னவன்
முறையில் செல மிதிலே
நன் மாநகர் உறைவார் மன
நனி பின் செல நடுவே
தன் நேர் புரை தரு தம்பியர்
தழுவிச் செல மழைவாய்
மின்னே எனும் இடையாளொடு
இனிதேகினன் வீரன்