பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157



ன்னும் அறவையின் வானகம்
        இருள் நின்றது வெளியாய்
மின்னும்படி புடை வீசிய
        சடையான் மழுவுடையான்
பொன்னின் மலை வருகின்றது
        போல்வான் அனல்கால்வான்
உன்னும் சுழல் விழியான் உரும்
        அதிர்கின்ற தோர் உரையான்

இவ்வாறு அந்த நிமித்தகன் சொல்லிக் கொண்டிருந்த போதே வானத்தில் இருள் விலகியது; வெளிச்சம் உண்டாயிற்று; மின்னல் ஒளி வீசும் சடையுடனும், மழு என்ற கைக் கோடாலியுடனும் தீப்பொறி கக்கும் விழியுடனும், இடி முழக்கம் போன்ற சொல்லுடனும், பொன்மலையாகிய மேருவே நடந்து வருவது போல வந்தான் பரசுராமன்.

𝑥𝑥𝑥𝑥

என்னும் அளவையின் – என்று நிமித்தகன் சொல்லிய அளவில்; வானசம் — வானத்திலே; இருள் நின்றது வெளி ஆய் — இருந்த இருள் நீங்கி வெளிச்சம் உண்டாகி; மின்னும்படி புடை வீசிய பக்கங்களிலே மின்னல் ஒளி வீசிய; சடையான் — செஞ்சடையுடையவனும்; மழு உடையான் – மழு என்ற கைக்கோடாலியை உடையவனும்; பொன்னின் பல வருகின்றது போல்வான் பொன்மலையே நடந்து வருவது போன்ற தோற்றம் உடையவனும்: அனல் சால்வான் — தீயை உமிழ்கின்ற; உன்னும் சுழல் விழியான் — உற்று நோக்கும் சுழல் விழி கொண்டவனும்; உரும் அதிர்கின்றது ஓர் உரையான் – இடிபோல முழங்கும் சொற்களை உடையவனும் (ஆன பரசுராமன் வந்தான்)

𝑥𝑥𝑥𝑥