பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164



நிருபர்க்கு-அரசர்களுக்கு (அதாவது க்ஷத்திரியர்களுக்கு); ஒரு பழிபற்றிட– ஒரு பழியுண்டாகும்படி; நில மன்னவர் குலமும்—பூமியில் உள்ள அரசர் குலம் முழுவதும்; கரு அற்றிட–பூண்டோடு நாசமடைய; மழுவாள் கொடு—தன் கையிலே உள்ள கோடாலியைக் கொண்டு; இருபத்தொரு கால்படி—இருபத்தி ஒரு தலைமுறை; உயிர் கவரா – உயிர் கவர்ந்து.களைகட்டு—அரசர்குலத்துக்களை பறித்து; இமிழ் கடல் ஒத்து—ஒலிக்கின்ற கடல்போல; அலை எறியும்—அலைமோதுகின்ற; குருதி புனல் அதனில்—அந்த அரசர்களின் இரத்த வெள்ளத்திலே; புகமுழுகி—தனது உடம்பு நனைய மூழ்கி; தனி குடைவான் – எவரும் செய்யாத முறையில் நீராடியவனும்.

xxxx


பொங்கும் படை இரியக்
      கிளர் புருவங் கடை நெரியக்
வெங்கண் பொறி சிதறக்
      கடிது உரும் ஏறென விடையா
சிங்கம் என உயர் தேர் வரு
      குமரன் எதிர் சென்றான்.
அங்கண் அழகனும் இங்கிவன்
      ஆரோ எனும் அளவில்

தசரதனின் பெரிய படையும் அஞ்சும் வகையில் கண்கள் தீப்பொறி பறக்க, இடிபோல முழங்கிக் கொண்டு, சிங்கம் போல வரும் இராமன் எதிரே சென்றான் பரசுராமன். இவ்வாறு வரும் இவன் யாரோ என்று எண்ணினான் இராமன்.

xxxx