14
தமிழ் நாவலர் சரிதையில் பாடல் ஒன்று காணப்படுகிறது. இந்தப் பாடல் கம்பர் பாடிய ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட காகதீய அரசன் பிரதாபருத்திரன்.
அவனைப் பாராட்டிக் கம்பர் பாடிய பாடல் இது
அவனி முழுதுண்டும் அயிரா பதத்துன்
பவனி தொழுவார் படுத்தும்—புவனி
உருத்திரா உன்னுடைய ஓரங்கல் நாட்டில்
குருத்திரா வாழைக்குழாம்.
பிரதாப ருத்திரன் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு (1162—1179)
பிரதாப ருத்திரனைப் பாராட்டிக் கம்பர் பாடவேண்டிய காரணம் என்ன?
கம்பர் மீது சினம் கொண்ட சோழ அரசன் அவரைத் தன் சபையிலிருந்து விரட்டி விட்டான். கம்பரும் சோழனைச் சினந்து பாடி அவனது சபையை விட்டு வெளியேறினார். வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காகதீய அரசன் பிரதாபருத்திரன் சபையிலே சில காலம் இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமான பாடல்கள் இதோ:
போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
தூற்றினும் தூற்றுவர் - சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியவரே
–சோழன்