பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


ஆலைவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலை வாய்க் கனியின் தேனும்
தொடை இழி இறாலின் தேனும்
மாலை வாய் உகுத்த தேனும்
வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை வாய் மடுப்ப உண்டு
மீன் எலாம் களிக்கும் மாதோ

அன்னப் பேடுகள் என்ன செய்கின்றன? குளங்களிலும் கழனிகளிலும் மலர்ந்த தாமரை மலர்களிலே தங்கள் குஞ்சுகளைப் படுக்கவிட்டு ஆனந்தமாக உலவுகின்றன முழங்கால் வரையில் சேறு பூசிக்கொண்டிருக்கிற எருமைகள் வந்து அந்தக் கழனிகளிலும் குளங்களிலும் படுக்கின்றன. மீன்கள் துள்ளி அந்த எருமைகளின் மடியிலே முட்டுகின்றன எருமைக் கன்றின் நினைவு வருகிறது எருமைக்கு, தங்கள் கன்றுகளை எண்ணிக் கத்துகின்றன. உடனே என்ன ஆகிறது? பால் சுரக்கின்றது. தாமரை மலர்களிலே படுத்துக் கிடக்கும் அன்னக் குஞ்சுகள் அந்தப் பாலை உண்டு உறங்குகின்றன; குஞ்சுகள் உறங்க வேண்டுமானால் தாலாட்டுப் பாட வேண்டுமே! அந்த நீர் நிலைகளிலே உள்ள பச்சைத் தேரைகள் விடாமல் சப்தம் செய்வது தாலாட்டுப் போல் இருக்கிறது. அன்னக் குஞ்சுகள் ஆனந்தமாகத் துயில் கொள்கின்றன; இப்படிப்பட்ட வயல்கள் நிறைந்தது கோசலநாடு.

சேல் உண்ட ஒண் கணாரில்
திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி
வளர்த்திய மழலைப் பிள்ளை