பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


கால் உண்ட சேற்று மேதி
கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை
தாலாட்டும் பண்ணை.

சோலைகளிலே ஆணும் பெண்ணுமாகக் குயில் இனங்கள் இன்புற்றிருக்கின்றன. குயில்களுக்குத் திருமணம். திருமணம் என்று சொன்னால் களிப்பு தானே. களியாட்டம் வேண்டும் அல்லவா! இந்தக் காலத்திலே திருமணம் என்று சொன்னால் வரவேற்பு என்று ஒரு நிகழ்ச்சி. அப்போது சிறந்த சங்கீத வித்வான்களை அழைத்துப் பாடச் சொல்கிறார்கள். நாட்டியம் பயின்றவர்களை அழைத்து நாட்டியம் ஆடச் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்கூடாகக் காண்கிறோம். அதே போல சோலைகளிலே நடக்கும் குயில்களின் திருமணத்துக்கு நாட்டியக் கச்சேரி வேண்டாமா? அங்கே உள்ள மயில்கள் அழகிய தோகையை விரித்து ஆடுகின்றன. பாட்டுக் கச்சேரி வேண்டும் அல்லவா! வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அது எப்படியிருக்கிறது? விடியற் காலையிலே பாடுகின்ற பள்ளி எழுச்சி போல் இருக்கிறது.

பள்ளி எழுச்சி எதற்காகப் பாடுவார்கள்? விடியற் காலத்திலே அரசர்கள் படுக்கை விட்டு எழுந்திருப்பதற்காகப் பாடுவார்கள். பள்ளி எழுச்சி பாடக் கேட்ட அரசர்கள் விழித்து எழுவார்கள். அதே போத தாமரை மலர்களிலே அதுவரை துயில் கொண்டிருந்த ராஜ ஹம்ஸங்கள் கண் விழித்து எழுகின்றன. எதற்கு? குயில்களின் திருமணம் காண்பதற்கு.

இயற்கைச் செல்வத்தையும் நீர்வள நிலவளத்தையும் இதுவரை எடுத்துரைத்தார் கம்பர். இனி பொருள்பற்றிச் சொல்கிறார்.