பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


அந்நாட்டு மக்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொண்டு வந்து கொட்டுமாம். எவை மரக்கலங்கள், எத்தகைய மரக்கலங்கள்? வாணிபம் செய்கிற மரக்கலங்கள். பூமியோ நல்ல விளைச்சல் தரும், சுரங்கங்கள் நல்ல ரத்தினங்கள் தரும்.


கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா
நிலம் சுரக்கும்; நிறை வளம் நல்மணி
பிலம் சுரக்கும்.................................................
.................................................................................
.

ஒரு நாட்டிலே எல்லாச் செல்வங்களும் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? போதாது. செல்வம் முழுவதும் சிலர் வசம் குவிந்து விடும். அவர்கள் செல்வச் சீமான்களாக இருப்பார்கள். பலர் ஓட்டாண்டிகளாக இருப்பார்கள். ஏழை—பணக்காரன் என்ற வேறுபாடு நிலவும்; ஆண்டான் — அடிமை என்ற ஏற்றத்தாழ்வு நிலவும். உடையவர்—இல்லாதவர் என்ற வர்க்க பேதம் உண்டாகும். ஆகவே ஒரு நாட்டில் செல்வச் செழிப்பு இருந்தால் மட்டும் போதாது, அச்செல்வம் நாட்டின் பொது உடைமையாக வேண்டும். செல்வத்தை எல்லோரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்; சமதர்மம் வேண்டும்.

கோசல நாட்டிலே சமதர்மம் நிலவியது என்கிறார் கம்பர்,

எல்லாரும் எல்லாப் பெரும்
செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையாரும்
இல்லை மாதோ

5