பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62



இளம் பெண்கள் பந்து விளையாடியும், கல்வி பயின்றும் மகிழும் கல்விக் கூடங்கள் எங்கே இருந்தன? ஊர் நடுவிலா? சந்தடி மிக்க தெருக்களிலா? ஐந்தடுக்கு மாடிக் கட்டிடங்களிலா? இல்லை; இல்லை. சண்பகத் தோட்டங்களிலே இருந்தன. மயிலேறும் முருகன் போன்ற அழகிய இளம் பிள்ளைகள் போர்க் கலை பயிலும் இடங்கள் எங்கே இருந்தன? நந்தன வனத்திலா? இல்லை. நறுமணம் வீசும் முல்லை வனத்தில் இருந்தன.

இளையவர்—இளம் பெண்கள்; பந்தினை பயில் இடம்—பந்து எறிந்து விளையாடும் இடம்; சந்தன வனம் அல—சந்தனக் காட்டில் இல்லை. சண்பக வனமாம்—சண்பகத் தோட்டங்களாம். மயில் ஊர்—மயில் வாகனத்தில் ஏறிச் செல்லும்; கந்தனை அனையவர்—பாலசுப்பிரமணியன் போன்ற இளம் ஆண் பிள்ளைகள்; கலை தெரி கழகம்—போர்க் கலை பயிலும் இடம்; நந்தன வனம் அல—நந்தன வனத்தில் இல்லை; நறை விரி புறவம்—மணம் வீசும் காடுகள்.

றுப்புறு மனமும் கண்ணில்
     சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி
      உறுபகை இன்றுச் சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர்
      மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம்
      பொருத்து வாரும்.