பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72



அந்தக் கலைக் கோட்டு முனிவர் இந்த உலக மக்கள் எல்லாரையும் விலங்குகள் என்று கருதுபவர்; பிரமதேவனும் சிவபெருமானும் புகழத் தக்கவர் அமைதியானவர், சாந்த சொரூபர். அவரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் மகப்பேறு உண்டாகும்.என்றார் வசிஷ்டர்.

𝑥𝑥𝑥𝑥

பரந்தனின்—ஆதிசேடனுடைய; மகுடம் கோடி பரித்த—பலதலைகளாலும் தாங்கப் பெற்ற; பார் இதனில்—இந்த பூமியிலே, வைகும்—வசிக்கின்ற; மாந்தரை—மனிதர் எல்லாரையும்; விலங்கு என்று உன்னும்—விலங்குகள் என்று எண்ணும் தன்மை கொண்டவரும்; மாதவத்தன்—பெருந்தவமுடையவரும்; எண்ணில்–ஆராயுமிடத்து; பூ தவிசு உகந்து உளோனும்—தாமரை மலராகிய ஆசனத்தை விரும்பி வீற்றிருக்கிறவனும் (பிரமதேவனும்) புர அரியும்—திரிபுரங்களை அழித்த சிவபெருமானும்; புகழ்தற்கு ஒத்த–புகழ்வதற்குத்தக்கவனுமாகிய; சாந்தனால்—சாந்த குணம் மிக்க அக் கலைக்கோட்டு முனிவனால் (அம் முனிவனைக் கொண்டு) வேள்வி முற்றின்—யாகத்தை நன்கு முடிவுறச் செய்தால்; தனையர்கள் உளர்–உனக்கு மக்கள் பிறப்பார்கள்; என்றான்– என்று சொன்னார் (வசிஷ்டர்)

𝑥𝑥𝑥𝑥

தக்ஷப் பிரஜாபதியின் பெண்கள் பதின்மூவர். அவர்களைக் காசியபருக்கு மணம் செய்து கொடுத்தார் தக்ஷப்பிரஜாபதி, அவர்கள் மூலம் இந்த உலகத்து உயிர் இனங்கள் எல்லாம் பெற்றார் காசியபர். அதனாலே இந்த உலகுக்குக் காசினி என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தப் பதின்மூவர் அன்றி, வேறு சில பெண்கள் மூலம் மற்றும் சில ரிஷிகளைப் பெற்றார் காசியபர். அப்படிப் பெற்றவருள் ஒருவர் விபாண்டகர்.