78
ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கிய தசரத மன்னனுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
தசரதனுக்கு மட்டிலா மகிழ்ச்சி. க்ஷத்திரியர்களுக்கு உரிய தர்மத்தின்படி அந்த நான்கு குழந்தைகளையும் வளர்த்து வந்தான் தசரதன். அரச குமாரர்கள் பயில வேண்டிய கலைகள் யாவும் கற்கச் செய்தான்.
சில ஆண்டுகள் சென்றன. ஒரு நாள், விசுவாமித்திர முனிவர் வந்தார்.
𝑥𝑥𝑥𝑥
வந்து முனி எய்து தலும்
மார்பில் அணி யாரம்
அந்தர தலத்து இரவி
அஞ்ச ஒளி விஞ்சக்
கந்த மலரில் கடவுள் தன்
வரவு காணும்
இந்திரன் எனக் கடிது
எழுந்து அடி பணிந்தான்.
விசுவாமித்திர முனிவரின் வரவு கண்டான் தசரதன். தனது சிம்மாசனத்தை விட்டு எழுந்தான்; விரைந்து ஓடினான்; விசுவாமித்திரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்
அது எப்படி இருந்தது? பிரம்ம தேவனின் வரவு கண்ட இந்திரன் விரைந்து சென்று அப்பிரமதேவனின் திருவடிகளில் வீழ்ந்து எப்படி வரவேற்பானோ அப்படி இருந்தது.
விசுவாமித்திரரை பிரம தேவனுக்கும், தசரதனை இந்திரனுக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர்
𝑥𝑥𝑥