85
தரு—தன்னை அடைந்தவர்க்கு நல்ல பலன் தர வல்ல; வனத்துள்– சித்த வனத்தில் யான் இயற்றும்-நான் செய்ய இருக்கும்; தகை வேள்விக்கு—சிறந்த வேள்விக்கு; இடையூறாக—தடையாக; தவம் செய்வோர்கள்—தவம் செய்கிறவர்கள்; வெகுவர–அஞ்சும் வண்ணம்; சென்று அடை—அவர்களிடம் சென்று அடைந்து அவர்களைத் துன்புறுத்தும்; காமவெகுளி என–காமம், சினம் போல; நிருதர்—அரக்கர்; இடை—இடையிலே வந்து; விலக்கா வண்ணம்-அந்த வேள்வியினின்றும் விலக்காதவாறு; செரு முகத்து—போர் முனையிலே நின்று; காத்தி—காப்பாயாக; என– என்று கூறி; நின் சிறுவர் நால்வருள்–நின் புதல்வர் நால்வரில்; கரிய செம்மல்-கரிய திருமேனியுடைய இராமனை; தந்திடுதி என–என்னுடன் அனுப்புவாயாக; என்று; உயிர் இரக்கும்–உயிர் தரும்படி யாசிக்கின்ற; கொடும் கூற்றின்—கொடிய இயமனைப் போல; உளைய–தசரதன் மனம் தவிக்கும் படியாக சொன்னான்- கூறினான்.
𝑥𝑥𝑥𝑥
எண்ணிலா அருந்தவத்தோன்
இயம்பிய சொல்
மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில்
கனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும்
உண்ணிலாவிய துயரம்
பிடித்து உந்த
ஆருயிர் நின்று ஊசலாட
கண்ணிலான் பெற்று இழந்தான்
என உழந்தான்
கடுந்துயரக் கால வேலோன்;