பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88



முனிவர் முன் சென்றார். அரச குமாரர் இருவரும் வில் ஏந்தியவராகப்பின் சென்றனர்.

𝑥𝑥𝑥𝑥

வென்றி வாள் புடை
      விசித்து மெய்மை போல்
என்றும் தேய்வுறாத்
      தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர்
      தோளில் கொற்றவில்
ஒன்று தாங்கினான்;
       உலகந் தாங்கினான்

உலகத்தைக் காக்கும் திருமாலின் அம்சமாக அவதரித்து இராமன் தனது இடது பக்கத்திலே வாளைக் கட்டினான்; தோள்களிலே அம்புப் பெட்டியைக் கட்டினான். வெற்றி தரும் வில்லை இடது கையிலே பிடித்தான்.

𝑥𝑥𝑥𝑥

உலகம் தாங்கினான்-உலகம் தாங்கும் திருமாலின் அம்சமாக அவதரித்த இராமன்; வென்றி வாள்—வெற்றிக்குரிய வாளை; புடை விசித்து—இடது பக்கத்திலே கட்டி; இரு குன்றம் போன்று—இரண்டு குன்றுகள் போல; உயர் தோளில்—உயர்ந்துள்ள தனது இரு தோள்களிலே; மெய்ம்மை போல—சத்தியமான தருமத்தைப் போல; என்றும் தேய்வு உறா—எந்த நாளிலும் குறைவு படாத; தூணி யாத்து—அம்புப்பட்டியலைக் கட்டி கொற்றம் வில் ஒன்று தாங்கினான்—வெற்றி தரும் வில் ஒன்றையும் இடக்கையிலே பிடித்தவனாகி

𝑥𝑥𝑥𝑥