பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


அலங்கரிக்கின்ற ஆரவாரத்தை உடைய அந்த அயோத்தி நகரம்‌ தேவர்‌ வாழும்‌ பொன்னகர்‌ போல்‌ பொலிகின்ற சமயம்‌.

உலகினுச்குத்‌ துன்பம்‌ செய்கின்ற இராவணன்‌ இழைத்த தீமை எல்லாம்‌ ஒரு வடிவு கொண்டு வந்தது. போலத்‌ தோன்றினாள்‌. தோன்றியவள்‌ எவள்‌?

நெருங்குவதற்கு அரிய கொடிய மனம்‌ கொண்ட கூனி.

அந்நகர்‌– அந்த அயோத்தி நகரத்தை; அணிவுறும்‌– அலங்கரிக்கின்ற; அமலை– பேர்‌ ஆரவாரத்தினால்‌; வானவர்‌ பொன்னகர்‌ இயல்பு என– தேவலோக நகரின்‌ இயல்பு போல; பொலியும்‌ ஏல்‌ வையில்‌– விளங்கும்‌ சமயத்தில்‌; இன்னல்‌ செய்‌– (எவ்வுலகுக்கும்‌) துன்பமே செய்கின்ற; இராவணன்‌ இழைத்த தீமைபோல்‌– இராவணன்‌ முற்பிறப்பில்‌ செய்த தீமையெல்லாம்‌ ஒரு உருக்கொண்டு தோன்றியது போல்‌; துன்‌ ௮ரும்‌– பெறுதற்கு அரிய; கொடு மனக கூனி– கொடுமை கொண்ட மனத்தினளான; கூனி (மந்தரை) தோன்றினாள்‌– வெளியே போத்தாள்‌..

தோன்றிய கூனியும்‌ துடிக்கும்‌ நெஞ்சினாள்‌
ஊன்றிய வெகுளியாள்‌ உளைக்கும்‌ உள்ளத்தாள்‌
கான்று எரி நயனத்தாள்‌ கதிக்கும்‌ சொல்லினாள்‌
மூன்று உலகினுக்கும்‌ ஓர்‌ இடுக்கண்‌ மூட்டுவாள்‌.