42
நன்மை தரத்தக்க இதனை நான் உனக்குக் கூறுவேன்; என்ன - என்று கூறி; அன்னவனுக்கு - அந்த இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதியளிக்கும் நல்ல புத்தியாகிய நீதி அனைத்தும் சொன்னான் - எடுத்துக் கூறினான் மாரீசன்.
◯◯
திறத் திறனாலே செய்தவம்
முற்றித் திரு உற்றாய்;
மறத்திறனாலே சொல்லுதி;
சொல் ஆய்; மறை வல்லாய்!
அறத் திறனாலே எய்தினை
அன்றோ அது; நீயும்
புறத்திறனாலே பின்னும்
இழக்கப் புகுவாயோ?
“நீ இப்போது பெற்றுள்ள செல்வமும் சீரும் தர்ம வழியிலே அறத்தினாலே வந்தவை. அவைகளை இந்த மறவழி பின்பற்றி இழக்கத் துணிவாயோ? சொல்?” என்றான்.
◯◯
மறைவல்லோய் - வேதங்களை (நன்கு) அறிந்தவனே! திறம் திறனாலே - மிகத் திறமையினாலே; செய்தவம் முற்றி - செய்யக் கூடிய தவங்களையெல்லாம் செய்து முடித்து; திரு உற்றாய் - நீ இப்பொழுது பெற்றுள்ள சீரும் செல்வமும் பெற்றுள்ளாய்; மறத்தினாலே - அதர்மத்தினால் (உன் கொடிய வலிமையை மேற்கொண்டு) சொல்லுதி - இவ்வாறு சொல்கிறாய்; அறத்திறனாலே எய்தினை அன்றோ? - நீ செய்த அறத்தின் வலிமையினாலே இச் செல்வச் சிறப்பினை அடைந்தாய் அன்றோ? அது - அச் செல்வ வாழ்க்கையை; புறத்திறனாலே - அறத்திற்குப்