பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


“விசுவாமித்திரருடைய யாகத்தின்‌ போது நான்‌ அடைத்த அவமானம்‌ போக்கச்‌ க௫தி அரக்கரான நண்பர்‌ இருவருடனே கண்ட கவனம்‌ புகுந்தேன்‌. மான்‌ உருவில்‌ இராமனுக்குக்‌ கேடு விளைக்கப்‌ புகுந்தேன்‌. அப்போது அவன்‌ ஏவிய கணையினால்‌ எனது நண்பர்‌ இருவரும்‌ மாய்ந்தனர்‌. நான்‌ பயந்து ஓடி வந்தேன்‌. மீண்டும்‌ நான்‌ சென்று செய்யும்‌ செயல்‌ யாது சொல்‌” என்றான்‌ மாரீசன்‌.

ஆண்டையான்‌ அனைய கூற– இராவணன்‌ அவ்வாறு சொல்லவே; (மாரீசன்‌) பூண்ட என்‌ மானம்‌. தீர– முதன்‌ முதல்‌ விசுவாமித்தரர்‌ யாகம்‌ செய்தபோது நான்‌ அந்த இராமனால்‌ அடைந்த அவமானம்‌ நீங்கும்‌ பொருட்டு; அரக்கர்‌ ஓர்‌ இருவரோடும்‌– நண்பர்களான இராக்கதர்‌ இருவருடனே; தண்டகம்‌ புகுந்தகாலை– மான்‌ வேடம்‌ பூண்டு இராமன்‌ இருந்த தண்டக வனம்‌ சென்று அவனுக்குக்‌ கேடு விளைக்கப்‌ புகுந்த காலை; தாண்டிய சரங்கள்‌ பாய– அந்த இராமன்‌ ஏவிய அம்புகள்‌ பாய்ந்தமையால்‌; துணைவர்‌– எனக்குத்‌ துணை வந்த நண்பர்‌; பட்டு உருள– ஆவி துறந்து கீழே விழுந்து உருள; அஞ்ச மீண்ட யான்‌– பயந்து ஒடிவந்த நான்‌; சென்று செய்யும்‌ வினை என்‌கொல்‌?– மறுபடியும்‌ அங்கு சென்று செய்யக்கூடிய செயல்‌ என்ன? விளம்புக– சொல்‌; என்றான்‌– என்று கேட்டான்‌.

ஆயவன்‌ அனைய கூற,
      அரக்கர்‌ கோன்‌ ஐய நொய்து உன்‌
தாயை ஆருயிர்‌ உண்டானை
      யான்‌ கொலச்‌ சமைந்து நின்றேன்‌
“போய்‌ ஐயா புணர்ப்பது என்னை
      என்பது பொருந்திற்று ஒன்றோ?
மாயையால்‌ வஞ்சித்து அன்றோ
      வௌவுகல்‌ அவளை” என்றான்‌.