பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

நாம நூல் மார்பினன்
       நணுகினான் அரோ
தூமனத்து அருந்ததி
       இருந்த சூழல் வாய்.

ஆமை போல் கூன் விழுந்த உடல்; கையிலே மணி மாலை; மார்பிலே பூணூல்; இவ்விதத் தோற்றத்துடன், அருந்ததி போலும் கற்பினளாகிய சீதை இருந்த பன்னசாலையை அணுகினான். யார்? இராவண சந்நியாசி.

தவத்தின் - தவத்திற்கு அறிகுறியான; தாமரை மணி தொடர் மாலையன் - தாமரை மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை ஏந்தியவனாய்; ஆமையின் இருக்கையின் - ஆமையின் முதுகு போல; வளைந்த - கூன் விழுந்த; ஆக்கையன் - உடல் கொண்டவனாய்; நாம நூல் மார்பினன் - பெருமை மிகு பூணுல் புரளும் மார்புடையயோனாய்; தூமனத்து - தூய சிந்தையுடைய; அருந்ததி - அருந்ததி போலும் கற்புடைய சீதா பிராட்டி; இருந்த சூழல்வாய் - இருந்த பன்ன சாலையை; அணுகினான் - நெருங்கினான்

தோம் அறு சாலையின்
       வாயில் துன்னினான்
நா முதல் குழறிட
       நடுங்கு சொல்லினான்
“யாவிர் இவ்விருக்கையுள்
       இருந்துளீர்?” என்றான்
தேவரும் மருள் கொளத்
       தெரிந்த மேனியான்.