பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


மந்தரை– அந்தக்‌ கூனி; பின்னரும்‌– மீண்டும்‌; வகைந்து– வகைப்படுத்திக்‌ கூறுவாள்‌– சொல்வாள்‌ ஆயினாள்‌; அந்தரம்‌ தீர்ந்து– உலகு– இராமனுக்கே முடி சூட்ட வேண்டும்‌ என்று இரகசியமாக மனத்தின்‌ உள்ளே தீர்மானம்‌ செய்துக்‌கொண்டு; உலகு அளிக்கும்‌ நீர்மையால்‌– அரசு கொடுத்த தன்மையால்‌; தந்தையும்‌ கொடியன்‌– தந்தையாகிய தசரதனும்‌ உனக்குக்‌ கொடியவன்‌ ஆனான்‌; நல்‌ தாயும்‌ தீயள்‌– அது கேட்டு மகிழும்‌ உனது தாயும்‌ கொடியவள்‌ ஆனாள்‌; பரகனே– பரதா! எந்தையே என்‌ அப்பா; என்‌ செய்வாய்‌– நீ என்ன செய்வாய்‌?

“மறந்திலள்‌ கோசலை
        உறுதி; மைந்தனும்‌
சிறந்த நல்திருவினில்‌
        திருவும்‌ எய்தினான்‌
இறந்திலன்‌; இருந்தனன்‌;
        என்‌ செய்து ஆற்றுவான்‌
பிறந்திலன்‌ பரதன்‌ நீ
        பெற்றதால்‌” என்றாள்‌.

இராமன்‌ கோசலை மகனாகப்‌ பிறந்தான்‌, தனது நலனையும்‌ தனது மைந்தன்‌ நலனையும்‌ அவள்‌ மறக்கவில்லை. சமயம்‌ பார்த்துத்‌ தன்‌ மகனுக்கு அரசை வாங்கிக்‌ கொடுத்து விட்டாள்‌.

நீயும்‌ பரதனைப்‌ பெற்றாய்‌? என்ன பயன்‌? நீ அவனைப்‌ பெற்றதும்‌ பெறாததும்‌ ஒன்றே. சாவுமில்லை வாழ்வுமில்லை என்ற நிலை அவனுக்கு.