பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



94


வாள் தடங்கண்ணின் நீர்
        யாவர் மாமகள்?
காட்டிடை அரும் பகல்
        கழிக்கின்றீர்” என்றான்.

“கங்கை நீர் பாயும் அந்தக் கோசல வள நாட்டுக்கு ஒருமுறை சென்றுளேன்; நீவிர் சொன்னவற்றைக் கேட்டுளேன்; ஆனால் நேரில் கண்டேன் அல்லன். அகன்ற மலர் விழியுடைய நீவிர் எவர் மகள்? இந்தக் காட்டிடத்தே அரிய வாழ்நாளைக் கழிக்கின்றீர்?” என இரங்குவான் போல் கேட்டான்.

கேட்டனன் – நீர் சொன்ன யாவும் கேள்வியுற்றேன் (ஆனால்) கண்டிலன் – நான் அவரை நேரில் கண்டேன் அல்லன்; கெழுவு கங்கை நீர் நாட்டிடை – கங்கை ஆறு பாயும் அந்தக் கோசல வள நாட்டுக்கு; ஒரு முறை – ஒரு தடவை; நண்ணினேன் – போயிருந்தேன்; மலர் – தாமரை மலரையும்; வாள் – வாளையும் போன்ற; தடங்கண்ணின் – அகன்ற பெரிய கண்களையுடைய; நீர் யாவர் மாமகள் – நீவிர் எவருடைய மகள்? காடு இடை அரும் பகல் கழிக்கின்றீர்? – இத்தக் காட்டினிடையே அரிய வாழ்நாளைக் கழிக்கின்றீர்? என்றான் – என்று இரங்குவான் போல் கேட்டான்.


“அனக மா நெறி படர்
        அடிகள்! நும் அலால்
நினைவது ஓர் தெய்வம்
        வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மாமகள்; பெயர்
        சனகி; காகுத்தன்
மனைவி யான்” என்றனள்
        மறு இல் கற்பினாள்.