பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


மின்‌ உயிர்த்து உருமின்‌ சீறும்‌
        வெங்கணை விரவா முன்னம்‌
உன்‌ உயிர்க்கு உறுதி நோக்கின்‌
        ஒளித்தியாய்‌ ஓடி” என்றாள்‌.

“இந்த உயிர்‌ அற்பமானது; புல்லின்‌ நுனியிலே தங்கியுள்ள பனிநீர்‌ போன்று விரைவிலே அழியுந்‌ தன்மையது. இத்‌தகைய எனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதே என்று அஞ்சி நான்‌ உன்‌ கருத்துக்கு இணங்கேன்‌. குலத்திற்குக்‌ கேடு செய்யேன்‌. இடித்து முழங்கி மின்னல்‌ போல்‌ வரும்‌ இராமனின்‌ சுடுசரம்‌ உன்மீது பாயு முன்‌ ஓடி ஒளிந்து கொள்‌. உன்‌ உயிர்‌ மீது ஆசையிருந்தால்‌ அதைக்‌ காக்க ஒடு” என்றாள்‌.

நுனை நீரின்‌ – புல்லின்‌ நுனியிலே தங்கியிருக்கின்ற நீரீத்துளி போன்று; நொய்தாய்‌ – அற்பமாகி; போதலே – அழிந்து போவதையே; புரிந்து நின்ற – தன்‌ தொழிலாக்கிக்‌ கொண்டு நிற்கின்ற; இன்‌ உயிர்‌ இழத்தல்‌ அஞ்சி – இனிய உயிரை விடுவதற்குப்‌ பயந்து இல்‌ பிறப்பு அழிதல்‌ உண்டோ? நற்குடியிலே பிறந்‌த பெருமை அழியுமாறு செய்வதுண்டோ. மின்‌ உயிர்த்து – மின்னல்‌ போல்‌ ஒளி வீசி; உருமின்‌ சீறும்‌ – இடிபோல்‌ கர்ஜித்துக்கொண்டு வரும்‌; வெம்கணை – இராமனின்‌ கொடியகணைகள்‌; விரவா முன்னம்‌ – உன்னை நாடி வந்து அழிப்பதன்‌ முன்னர்‌: உன்‌ உயிர்க்கு – உன்‌னுடைய உயிருக்கு; உறுதி நோக்கின்‌ – நலம்‌ நாடினை ஆயின்‌; ஓடி ஒளித்தி – இவ்விடம்‌ விட்டு எங்காவது மறைந்து கொள்வாயாக; என்றாள்‌ – என்று சொன்னாள்‌.


“அணங்கினுக்கு அணங்கு அனாய்‌ நின்‌
        ஆசை நோய்‌ அகத்துப்‌ பொங்க
உணங்கிய உடம்பினேனுக்கு
        உயிரினை உதவி, உம்பர்க்‌