பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117



மலையே! மரங்களே! மயிலே! குயிலே! கலைமான்களே! பெண் மான்களே! ஆண் யானைகளே! பெண் யானைகளே! நிலை கொள்ளாமல் தத்தளிக்கும் உயிருடையேன் நான். எனது இந்த நிலையை நீங்கள் அறிவீர்கள் அழியாத வலிமை கொண்ட அந்த இராமனிடமும் லட்சுமணனிடம் சொல்வீராக.

மலையே – மலைகளே; மரனே – மரங்காள்; மயிலே – மயில்காள்; குயிலே – குயில்களே; கலையே – கலைமான்களே; பிணையே – பெண் மான்களே; களிறே – ஆண் யானைகளே; பிடியே – பெண் யானைகளே; நிலையா உயிரேன் – நிலை கொள்ளாது தத்தளிக்கின்ற உயிரையுடைய எனது; நிலை – நிலையை, தேறினிர் நீர் – நன்கு அறிந்த நீங்கள்; உலையா வலியார் – உழை அழியாத வலிமை கொண்ட அந்த இராம லட்சுமணரிடத்திலே; உரையீர் – சொல்வீராக.

“செஞ்சேவகனார் நிலை
        நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே
        வன தேவதைகாள்!
‘அஞ்சேல்’ என நல்குதிரேல்
        அடியேன்
உஞ்சால் அதுதான்
        இழிவோ? உரையீர்!”

மேகங்களே! சோலைகளே! வனதேவதைகளே! சிறந்த வீராகிய இராமபிரான் என்னை இழந்து துன்புறுவதை நீங்கள் அறிவீர்கள். அப்போது அவருக்குச் சொல்லுங்கள்,